Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது - அகில இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (08:24 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்திருப்பதாகவும், தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, அவர்கள் 7 பேரும் நாட்டின் பிரதமரையே கொன்றவர்கள், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெரிய மனதுடன் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால் அவர்கள் 7 பேரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
 
மத்திய அரசும், தமிழக அரசும் இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகின்றனர். ஒரு அரசின் கடமை  பயங்கரவாதிகளை தண்டிப்பதா? பாதுகாப்பதா? இப்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல் அவர்களை பாதுகாப்பதன் அறிகுறியே ஆகும்.
 
எனவே தமிழக அரசு அந்த 7 பேரை விடுவிக்கக்கூடாது என்பதே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments