Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தரவனக்காடு எண்ணெய்க் கசிவால் டால்பின்கள் இறக்கின்றனவா?

Webdunia
ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:11 IST)
வங்கதேசத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காட்டில் எண்ணெய்க் கப்பல் ஒன்று மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஒரு டால்பின் செத்துக்கிடக்கும் புகைப்படம் ஒன்றை வங்கதேச செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
 
இந்த குறிப்பிட்ட டால்பின் இறந்ததற்கான காரணம் என்ன என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் இந்த எண்ணெய்க்கசிவால் அந்த பகுதியில் வாழும் டால்பின்கள் உள்ளிட்ட அரிய வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்கள் குறித்த அச்சங்களை இந்த செய்தியும் புகைப்படமும் அதிகரித்திருக்கிறது.
 
மூன்று லட்சத்துக்கும் அதிகமான அடர்த்தியான பெட்ரோலிய எண்ணெயைத் தாங்கிவந்த இந்த கலம் வேறொரு கலத்துடன் மோதிக்கவிழ்ந்ததில், அதில் இருந்த எண்ணெய் அனைத்தும் சுந்தரவனக்காட்டின் நீரில் கசிந்தது.
 
இப்படி சுந்தரவனக்காட்டு நீர்நிலையில் சிந்தியிருக்கும் எண்ணெயை கைகளால் அப்புறப்படுத்துவதில் உள்ளூர் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கைக்கு கிடைத்த பானை, பாத்திர பண்டம் அனைத்தையும் பயன்படுத்தி அவர்கள் இந்த எண்ணெயை நீரில் இருந்து பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments