Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பெருமூச்சு விடலாம் கவுதம் மேனன்!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (15:43 IST)
மும்பையில் ஒரு உயரமான கட்டிடத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டாவின் கிளைமேக்ஸ் காட்சி எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 
தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கிவரும் படம் `என்னை நோக்கி பாயும் தோட்டா'. இதில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் ராணா டகுபதி நடித்துள்ளார். இந்த படத்தை கவுதம் மேனனின் 'ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. 
 
பைனான்ஸ் காரணத்தால் படப்பிடிப்பு வேலைகள் பல முறை நிறுத்தப்பட்டுள்ளது. 
 
படக்குழு ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மும்பையில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு தான் படத்தின் இறுதி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் படம் வெளியீட்டு குறித்த தகவலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஒருவழியாக நிதி நெருக்கடிகளை தாண்டி படப்பிடிப்பை நடத்தி முடிந்து விட்டதால் கவுதம் மேனன் பெரு மூச்சு விடலாம்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments