Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அந்த இரு மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  அதேபோல், அதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிளிலும் காணப்படுகிறது.
 
இதன் காரணமாக, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments