Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தினகரன்: மயில்சாமி

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (11:57 IST)
நடிகர் மயில்சாமி கடந்த சில மாதங்களாக அரசியல் ஆவேச கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்களில் தெரிவித்து வருகிறார் என்பதுதெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் செய்த போது, மத்திய அரசுக்கு தினகரன் அல்வா கொடுத்துவிட்டதாக கூறினார்



 
 
மத்திய அரசு 1800 அதிகாரிகளை வைத்து கொண்டு சசிகலா, தினகரனின் உறவினர்கள் அனைவரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை செய்து கொண்டிருந்தபோது கூலாக தினகரன், பசுவுக்கு வாழைப்பழம் கொடுத்தது, மத்திய அரசுக்கு அவர் அல்வா கொடுப்பது போல் எனக்கு தெரிந்தது என்று நடிகர் மயில்சாமி கூறினார்.
 
மேலும் 'ரெய்டு என்பதை நான் குறைகூறவில்லை. அதே நேரத்தில் ஒரு பிரிவினர்களை மட்டும் குறிவைத்து ரெய்டு செய்யாமல் அனைத்து அரசியல்வாதி வீடுகளிலும் ரெய்டு செய்தால் இதைவிட கோடிக்கணக்கில் பணம் பிடிபடலாம் என்று மயில்சாமி கூறினார். மேலும் மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும், மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்யும் தினகரனை தான் பாராட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments