Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தலைவன் அல்ல: என்ன ஆனது மு.க.அழகிரிக்கு?

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (20:05 IST)
மு.க.அழகிரி ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 5 ஆம் தேதி அவரது தலைமையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. 
 
இந்த அமைதி பேரணியின் நோக்கம் என்ன? என அழகிரியிடம் கேட்ட போது எனது தந்தையும், தலைவருமான கருணாநிதியின் 30 ஆம் நாள் நினைவு நாளையொட்டி இந்த அமைதி பேரணியை நடத்தினோம் என கூறியிருந்தார். 
 
இது நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அன்று நடந்த பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். 
 
அந்த கடிதத்தில், கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...
 
நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத்திறமை கொண்டவலும் அல்ல, ஒரு தனி மனிதன். என்னை தனி மனிதனான, தொண்டனாக ஏற்று என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கருணாநிதி மறைந்த 30 வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென் திரண்டு வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments