Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (20:57 IST)
உலக மொபைல் போன் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ள சாம்சங், இந்தியாவில் தனது தயாரிப்புகளை அவ்வபோது அறிமுகம் செய்து வருகின்றது. இந்திய சந்தை என்பது மொபைல் போன் சந்தையில் மிகப்பெரியது என்பதாலும் இங்கு போட்டி அதிகம் என்பதாலும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றது

இந்த நிலையில் பெங்களூரில் சாம்சங் நிறுவனம் ஒரு ஷோரூம் ஒன்றை சமீபத்தில் அமைத்துள்ளது. இந்த ஷோரூம்தான் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை பெருமையை உடைய இந்த ஷோரூம் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

பெங்களூரில் உள்ள முக்கிய பகுதியில் சுமார் 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாம்சங் ஷோரூமை அந்நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவர் இன்று திறந்து வைத்தார்.  இந்த ஷோரூமில் சாம்சங் நிறுவனத்தின் ஆரம்பகால மாடல்கள் முதல் லேட்டஸ்ட்டாக அறிமுகமான மாடல் வரை கிடைக்கும் என்பதுதான் இந்த ஷோரூமின் சிறப்பு

உலகின் மிகப்பெரிய சாம்சங் உற்பத்தி மையமும் இந்தியாவில் தான் இருக்கும் நிலையில் தற்போது ஷோரூமும் இந்தியாவில் உள்ளது இந்தியாவுக்கு சாம்சங் நிறுவனம் கொடுத்து வரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments