Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் மருத்துவ செலவிற்கு குழந்தையை விற்க முயன்ற கணவன் - போலீஸார் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (13:15 IST)
உத்திரபிரதேசத்தில் மனைவியின் மருத்துவ செலவிற்காக நபர் ஒருவர் தனது 4 மகளை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவிந்த் பன்ஜாரா. இவருக்கு சுக்தேவி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது.
 
இந்நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமுற்றார். 7 மாத கர்ப்பிணியான அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுக்தேவி மோசமான நிலையில் இருப்பதாகவும் சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யும்படியும் ரவிந்திடம் கூறியுள்ளனர்.
 
ரத்தம் பெற போதிய பணம் இல்லாததால், தனது 4 வயது மகளை ரவிந்த் விற்க முயன்றார். இதனையறிந்த போலீஸார் அதனைத் தடுத்து நிறுத்தினர். பின் அவர்கள் உன் மனைவிக்காக சிகிச்சை செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என ரவிந்திடம் கூறினர். இதனால் ரவிந்த் நிம்மதி அடைந்தார்.
 
பொதுமக்கள் பலர் போலீஸை விமர்சித்து வரும் சூழலில், இந்த போலீஸ்காரர்கள் செய்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments