Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி பெல்ட்டில் ரிலீஸுக்கு முன்பே சாதனை படைக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2!

இந்தி பெல்ட்டில் ரிலீஸுக்கு  முன்பே சாதனை படைக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2!

vinoth

, வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:03 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி திரையரங்க உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எந்தவொரு இந்திய படத்துக்கும் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதில்லை என சொல்லப்படுகிறது. அதே போல புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமை மற்றும் 275 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸிடம் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரண்மனை 4 ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுகிறதா? விஷாலின் ரத்னம் சோலோ ரிலீஸ்!