Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசை நம்பி பிரயோஜனம் இல்லை - களத்தில் குதித்த செயல் தலைவர்

மத்திய அரசை நம்பி பிரயோஜனம் இல்லை - களத்தில் குதித்த செயல் தலைவர்
, ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (10:32 IST)
மத்திய அரசை நம்பியிருந்தால் வேலைக்கு ஆகாது, எனவே கேரள சொந்தங்களுக்கு உதவுமாறு திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. 
 
மக்கள் பலர் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் மேலும் பல உயிர்கள் மாய்கின்றன. 
 
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
webdunia
இந்நிலையில் இதுகுறித்து பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கேரள மக்கள் தவித்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. மத்திய அரசு அறிவித்த உதவிகள் இன்னும் கேரள மக்களை போய் சேரவில்லை. 
 
ஆகவே மத்திய அரசை நம்பி இனி பிரயோஜனம் இல்லை. எனவே அரசியல் வேறுபாடுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அங்கு கஷ்டப்பட்டு வரும் நம் கேரள சொந்தங்களுக்கு உணவு, உடை, போர்வைகள், நாப்கின்கள் ஆகிய அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை தாராளமாக கொடுத்து உதவ வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணி மனைவியை பார்க்க மருத்துவமனைக்குள் டாக்டர் வேடமிட்டு சென்ற நபர்