Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடமாநிலங்களில் பெய்த தொடர் மழையால் 57 பேர் பலி

வடமாநிலங்களில் பெய்த தொடர் மழையால் 57 பேர் பலி
, செவ்வாய், 29 மே 2018 (19:21 IST)
இந்தியாவின் வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.
 
பீகாரில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்கு 19 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் உபியில் உள்ள உன்னாவ் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதில் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், மழையினால் அப்பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
webdunia
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய மழையால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் இந்த அமித் ஷா? இந்த விஷயத்தில் தலையிடுவது தவறானது: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு