Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உத்தரப்பிரதேசம்: இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி

உத்தரப்பிரதேசம்: இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி
, செவ்வாய், 29 மே 2018 (12:19 IST)
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
உபியில் உள்ள உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு இடி, மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 
கனமழையால் உபியின் உன்னாவ் மாவட்ட பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் விவகாரம் - தி.மு.க வின் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு