Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடிவீரனை தொடர்ந்து சத்தமில்லாமல் அசுரவதத்தில் சசிகுமார்

கொடிவீரனை தொடர்ந்து சத்தமில்லாமல் அசுரவதத்தில் சசிகுமார்
, சனி, 3 பிப்ரவரி 2018 (12:48 IST)
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து  முடிந்துள்ளது.
மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாபாலின் தைரியத்தை பாராட்டி சல்யூட் வைத்த பிரபல நடிகர்