Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்டோ வேண்டாம் தரிசனம் போதும்; அதிரவைத்த ரசிகர்

போட்டோ வேண்டாம் தரிசனம் போதும்; அதிரவைத்த ரசிகர்
, புதன், 27 டிசம்பர் 2017 (14:48 IST)
நடிகர் ரஜினியை சென்ற அவரது ரசிகர் ஒருவர் போட்டோ வேண்டாம் தரிசனம் போதும் என்று கூறி 3 நிமிடம் நின்றுள்ளார். 

 
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். நேற்று தொடங்கிய இந்த சந்திப்பு வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரசிகர்களை அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நேற்று ரசிகர்களைடையே பேசிய ரஜினி தனது அரசியல் நிலைபாடு குறித்தும் வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
 
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ரசிகர் ஒருவர் செய்த காரியம் ரஜினி மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த ரசிகர் ரஜினியை அருகில் நின்று வணங்கிவிட்டு புகைப்படம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
 
மேலும், நான் புகைப்படம் எடுக்கவரவில்லை, கடவுளைதான் பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு 3 நிமிடம் மேடையிலே நின்றாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவுக்கு அக்காவா? ஒழுங்கா ஓடிப்போயிடுங்க...