Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகைப்படம் வேண்டாம், கடவுளைக் காணவே வந்தேன்; ரஜினியை மிரள வைத்த ரசிகர்

புகைப்படம் வேண்டாம், கடவுளைக் காணவே வந்தேன்; ரஜினியை மிரள வைத்த ரசிகர்
, புதன், 27 டிசம்பர் 2017 (13:21 IST)
நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை சந்தித்தார். இதனையடுத்து இரண்டாவது கட்டமாக நடக்கும் இந்த சந்திப்பு நேற்று முதல் வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரஜினியை இன்று சந்திக்க வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர், அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல், ரஜினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் போட்டோ எடுத்துட்டு கெளம்பு என்று அவரை பார்த்து கூச்சலிட்டனர். அதற்கு அவரோ ’கடவுளை அருகில் சந்தித்ததே போதும்’, புகைப்படம் வேண்டாம் என்றார். ரஜினியிடம் ஆசி வாங்கிய பின் அவர் அங்கிருந்து சென்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பாகுபலி’ பிரபாஸை இயக்கும் ‘மெர்சல்’ இயக்குநர்