Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணி அதிரடி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணி அதிரடி வெற்றி
, வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (22:28 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில் தற்போது குவாலிஃபையர் போட்டிகள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே. முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று திண்டுக்கல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று கோவை மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான 2வது குவாலிஃபையர் போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அனி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்தது. வெங்கட்ராமன் 45 ரன்களும், ராஜேஷ் 29 ரன்களும், முகுந்த் 28 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை அணி வரும் 12ஆம் தேதி ஞாயிறு அன்று திண்டுக்கல் அணியுடன் இறுதி போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் டி.என்.பி.எல் தொடரின் சாம்பியன் அணி ஆகும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15/3: இந்திய அணி சறுக்கலுக்கு ப்ரேக் விட்ட மழை!