Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகையை கணவரே சுட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல நடிகையை கணவரே சுட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்
, வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:54 IST)
பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவரை அவரது கணவரே சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டின் நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவர் அந்நாட்டின் கைபர் பக்துங்குவா என்ற பகுதியில் அவருடைய சகோதரருடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த அவரது கணவர் தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரேஷ்மாவின் கணவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ரேஷ்மாவை சுட்டு கொலை செய்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ரேஷ்மாவின் கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்: கர்நாடகா ரிபோர்ட்!