Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் அசத்தலான பந்துவீச்சால் ஐதராபாத் திணறல்

சென்னையின் அசத்தலான பந்துவீச்சால் ஐதராபாத் திணறல்
, ஞாயிறு, 13 மே 2018 (16:48 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 46வது போட்டி புனே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை சென்னை அணி கேப்டன் தேர்வு செய்ததால், ஐதராபாத் தற்போது களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது
 
சென்னை அணியின் சாஹர், வாட்சன், தாகூர் ஆகியோர்களின் அசத்தலான பவுலிங் காரணமாக ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறி வருகின்றனர்; சற்றுமுன் வரை ஐதராபாத் அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. ரன்ரேட் வெறும் 5.66 என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் சாஹர் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 16 ரன்களே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதேபோல் தாகூர் இரண்டு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்,
 
இருப்பினும் ஐதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தவான் மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் களத்தில் உள்ளதால் இனிவரும் ஓவர்களில் அவர்கள் அடித்து ஆடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐதராபாத்திற்கு எதிரான போட்டி - ஃபீல்டிங் செய்யும் சென்னை அணி