Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி
, செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (19:10 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று விவசாயி சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
 
இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறினார்.
 
webdunia
ஆனால் இதனை நிராகரித்த  நீதிபதி டி.ராஜா, 'காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? என்ற கேள்வியை தமிழக அரசு முன் வைத்தார். மேலும் போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி