Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி

மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி
, செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (19:00 IST)
தமிழகத்தில் காவிரி தண்ணீருக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுகவும் காவிரிக்காக உண்ணாவிரதம் உள்பட ஒருசில போராட்டங்களை நடத்தி வருகிறது
 
இந்த நிலையில் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யுவராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'எங்களை பொருத்தவரையும் காவிரி நீரை கர்நாடகத்திற்கே கிடைக்கவே முக்கியத்துவம் கொடுப்போம். கர்நாடக மாநிலத்தின் தேவை போக மீதியிருந்தால் மட்டுமே எங்கள் சகோதரர்களாக தமிழர்களுக்கு காவிரி நீரை கொடுப்போம்' என்று கூறியுள்ளார்.
 
கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கும் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான் காவிரி விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றால் மூன்றே மூன்று தொகுதிகளில் போட்டியிடும் கர்நாடக அதிமுகவும், தமிழகத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி