Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்

Siva

, வெள்ளி, 15 மார்ச் 2024 (08:52 IST)
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக அவ்வபோது இலங்கை கடற்படை கைது செய்து வரும் நிலையில் இந்த தொடர் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர் சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றன. 
 
மத்திய மாநில அரசுகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நெடுந்தீவு  அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் எல்லை தாண்டி மேம்படுத்ததாக கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் காங்கேயம் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
 
இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் கடத்தல் சம்பவம் முற்றிலும் வதந்தி- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்