Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவிற்கு ரூ.34.89 கோடி நிதியுதவி வழங்கிய கத்தார் நாடு

கேரளாவிற்கு ரூ.34.89 கோடி நிதியுதவி வழங்கிய கத்தார் நாடு
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (06:17 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு கத்தார் நாடு 34.89 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. 
 
மக்கள் பலர் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் மேலும் பல உயிர்கள் மாய்கின்றன. 
 
மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கேரள மக்களுக்கு உதவ முன் வர வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அவசர குழு ஒன்றை அமைத்து கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, கேரளாவிற்கு முதல்கட்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34.89 கோடி) நிவாரண நிதி வழங்குவதாக நேற்று அறிவித்தார். இந்த தொகையானது இந்தியாவிடம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. அது விரைவில் கேரள மக்களை சென்றடையும். பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள சொந்தங்களை காப்பாற்ற எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என கத்தார் மன்னர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூச்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் அபுதாபி போலீஸ்