Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளக்காடாக மாறி வரும் கேரள நாடு - பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

வெள்ளக்காடாக மாறி வரும் கேரள நாடு - பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு
, வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:29 IST)
கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக இதுவரை 73 பேர் பலியாகியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
webdunia
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  
 
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.  கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
webdunia
கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக ஏற்கனவே 58 பேர் இறந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: ராகுல்காந்தி நலம் விசாரித்தார்