Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆற்று மீன் கடல் மீன் எதில் அதிக சத்துக்கள் உள்ளது?

Fish
, ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (12:38 IST)
அசைவ பிரியர்களின் முக்கிய உணவாக மீன் உள்ளது. ஆறு, ஏரி, கடல்களில் இருந்து மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன்கள் வாழும் பகுதியை பொறுத்து அதன் சத்துகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆறு, கடலில் வாழும் மீனில் எது சத்தானது என்பது குறித்து பார்ப்போம்.


  • இறைச்சி உணவுகளில் கொழுப்பு இல்லாத உணவு என்பதால் மீன் மீது பலருக்கும் பிரியம் உள்ளது.
  • மீன்களில் உள்ள ஏராளமான புரதச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக உள்ளது.
  • கடலில் வளரும் மீன்கள், ஆறு, ஏரிகளில் வளரும் மீன்கள் இரண்டிலுமே ஏராளமான புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • ஆனால் கடலில் வளரும் மீன்கள் கடல்பாசியை சாப்பிட்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா 3 என்ற சத்தான அமிலம் உள்ளது.
  • கடல் மீன்களான மத்தி, சங்கரா போன்ற சிறிய மீன்களில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது
  • ஆறு, ஏரிகளில் புழு, பூச்சிகளை சாப்பிட்டு வளரும் மீன்களில் ஒமேகா 3 அமிலம் காணப்படுவதில்லை.
  • ஒமேகா 3 அமிலம் இருப்பதோடு மட்டுமல்லாமல் கடலில் பிடித்து வரப்படுவதால் கடல் மீன்கள் விலை சற்று அதிகமாக இருக்கும்.
  • ஆறு, ஏரிகளில் பிடிக்கப்படும் மீன்களில் ஒமேகா அமிலம் இல்லாவிட்டாலும் குறைந்த விலையில் பல ஊட்டச்சத்துகளை தருகின்றன.
  • ஆற்று மீன்களில் கெண்டை, ஜிலேபி, குறவை போன்ற மீன்கள் அதிக புரதச்சத்து கொண்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரடைப்பு எதனால் வருகிறது? என்னென்ன அறிகுறிகள்..!