Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகொரியா அதிபர் சீனா பயணம்: யாருக்கு சிக்கல்?

வடகொரியா அதிபர் சீனா பயணம்: யாருக்கு சிக்கல்?
, செவ்வாய், 19 ஜூன் 2018 (15:24 IST)
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சமீபத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்பை சிங்கப்பூரில் சந்தித்தார். இருநாடுகளுக்கும் மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இந்த சந்திப்பு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 
இந்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தங்கள் குறித்து சில முக்கிய நடவடிக்கைகள் கையெழுத்தானது. வடகொரிய அரசு மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்க விளக்கவே இந்த சந்திப்பிற்கு கிம் ஒப்புக்கொண்டதாவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. 
 
ஆனால், அமெரிக்க தரப்போ, முழுமையாக அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்த பின்னரே பொருளாதார தடை நீக்கப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. 
 
இந்நிலையில், வடகொரியா அதிபர் சீன அதிபரை சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரண்டு நாட்களுக்கு தங்கவுள்ளார். இந்த சந்திப்பில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்தும், அணு ஆயுதம் குறித்தும், இனி வரும் நாட்களில் வடகொரியா பாதுகாப்பு குறித்தும் பேசப்பட உள்ளதாம்.
 
ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் தொடர்பான விஷ்யங்களி மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாடுகளும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த ஒரு சூழ்நிலையில், வடகொரியா அதிபர் டிரம்ப்பை சந்தித்த சில நாட்களிலேயே சீனா சென்றுள்ளது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழுமா?