Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் முகாமிட்டுள்ள வடகொரிய அதிகாரிகள்: பின்னணி என்ன?

அமெரிக்காவில் முகாமிட்டுள்ள வடகொரிய அதிகாரிகள்: பின்னணி என்ன?
, புதன், 30 மே 2018 (11:36 IST)
வடகொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்த காரணத்தினால், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் இணைந்து வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. 
 
இதன் பின்னர் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் இந்த நிலையை மாற்றியது. தென்கொரியாவின் முயற்சியால் தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.
 
அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இதில் தென்கொரிய அதிபரும் பங்கேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியது. 
 
இதற்கு முன்னர் வடகொரிய மூத்த அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி இரு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு முன்பாக இருநாடுகளுக்கும் இடையே ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி - ரஜினிகாந்த்