Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் மீதான பாலியல் புகாரை விசாரிக்க மறுத்த வெள்ளை மாளிகை

டிரம்ப் மீதான பாலியல் புகாரை விசாரிக்க மறுத்த வெள்ளை மாளிகை
, செவ்வாய், 12 டிசம்பர் 2017 (21:44 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பாலியல் புகாரில் நாடாளுமன்ற குழு விசாரணை தேவை இல்லை என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அமெரிக்கவின் அதிபர் தேர்தல் நடைபெற்றபோது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். 
 
டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கேட்க வேண்டும் என ஐ.நா.வுக்கு அமெரிக்க தூதர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துக்கியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டொனால்டு டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது இதற்காக விரிவான பதில் அளிக்கப்பட்டு விட்டது. பாராளுமன்ற விசாரணை நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மர்மமான முறையில் பெண்களின் கற்பை சூறையாடிய டாக்ஸி டிரைவர்!