Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலைவனத்தில் அதிர்ச்சி - 20 குழந்தைகள் உட்பட 34 அகதிகளின் உடல்கள்

பாலைவனத்தில் அதிர்ச்சி - 20 குழந்தைகள் உட்பட 34 அகதிகளின் உடல்கள்
, வெள்ளி, 17 ஜூன் 2016 (17:50 IST)
நைஜீரியாவின் பரந்த பாலைவனத்தில் 20 குழந்தைகள் உட்பட 34 அகதிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடு அரசு நேற்று (புதன் கிழமை) அறிவித்துள்ளது.
 

 
அகதிகள், சஹாரா பாலைவனம் வழியாக லிபியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர். இந்நிலையில் 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உட்பட 34  பேரின் உடல்கள் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்ற போது  அசாமகா பகுதியில் ஜூன் 6 முதல் ஜூன் 12 இடைப்பட்ட நாட்களில் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த அகதிகள் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டுள்ளனர், அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் 26 -வயது பெண் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சர்வதேச குடியேறுவர் அமைப்பின் தகவலின் படி 1,20,000 நபர்கள் அகதேஸ் வழியாக சென்றுள்ளனர். கடந்த வருடம் 37 அகதிகள் பாலைவனத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மல்யுத்த வீராங்கனையை அசால்ட்டாக வீழ்த்திய இந்திய பெண் போலீஸ் அதிகாரி : வீடியோ