Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோஹ்லிக்கு அடுத்து இவர்தான்: கங்குலி

விராட் கோஹ்லிக்கு அடுத்து இவர்தான்: கங்குலி
, ஞாயிறு, 15 ஜூலை 2018 (15:16 IST)
விராட் கோஹ்லிக்கு அடுத்து ரோகித் சர்மாதான் மதிப்புமிக்க் வீரர் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் படுதோல்வி அடைந்தது.
 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, இந்திய அணி டி20 தொடரில் வெற்றி பெற உதவினார். முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார்.
 
இந்திய அணி வெற்றி பெற அதிகளவில் ரன்கள் குவித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் ரோகித் சர்மா எதிரணிகளை மிரட்டும் தொடக்க வீரராக மாறி வருகிறார்.
 
ரோகித் சர்மா களத்தில் நின்றாலே எதிர் அணிகள் கேப்டன்கள் கதி களங்குகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 
விராட் கோஹ்லிக்கு அடுத்து ரோகித் சர்மாதான் மதிப்புமிக்க வீரர் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினாடிக்கு 1லட்சம் கனஅடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை