Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடடே! தேவ் படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? கார்த்தி சொல்றத கேளுங்க

அடடே! தேவ் படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? கார்த்தி சொல்றத கேளுங்க
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (19:15 IST)
தேவ்’ படம் காதலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படவில்லை என கார்த்தி தெரிவித்தார்.


 
அறிமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடத்துள்ள படம் தேவ்.  இதில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் வேடத்தில் நடித்துள்ளனர். காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி தேவ் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், கார்த்தி பேசுகையில்,
 
தயாரிப்பாளர் லக்‌ஷ்மனும் நானும் சிறுவயதில் இருந்தே பிரெண்ட்ஸ். எப்பவுமே ஒன்னாத்தான் இருப்போம். இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
 
லக்‌ஷ்மனின் தாத்தா, ‘மதுரை வீரன்’ படத்தைத் தயாரித்தவர். அவரின் பரம்பரையில் இருந்து வந்து, லக்‌ஷ்மன் இந்தப் படத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.
 
இந்தப் படம், காதல் கதை மட்டுமல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ, அதைச் செய் என்ற கருத்தைத் தாங்கி இந்தப் படம் உருவாகியுள்ளது.
 
ரஜத், திறமையான இயக்குநர். அவர் இன்னும் பஷ  படங்கள் இயக்க வேண்டும்.  ரகுல் ப்ரீத்சிங், சிறந்த நடிகை. இதுபோல் அவர் பல கேரக்டரில் நடிக்க வேண்டும்.  அனைவருக்கும் தேவ் படம் பிடிக்கும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி உடையில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த பிரபல நடிகை!