Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்..சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்..சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு
, திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:34 IST)
பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வமணி அளித்த பேட்டியில் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் ஆர்.கே.செல்வமணி  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து  அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!