Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 4ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: விஷால்

ஏப்ரல் 4ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: விஷால்
, வெள்ளி, 30 மார்ச் 2018 (18:54 IST)
கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்தும் திரையுலகின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் இந்த பிரச்சனையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதாக விஷால் அறிவித்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி புதன்கிழமை அன்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்கப்போவதாக விஷால் தெரிவித்துள்ளார்.

webdunia
மேலும் .வேலை நிறுத்தம் என்றால் பெரிய நடிகர்கள் தயாரிப்பாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவருக்கும் கஷ்டமான ஒன்றாக  தான் இருக்கும் என்றும் ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதாரவியுடன் விஜய் திடீர் சந்திப்பு! திடீர் அரசியல் முடிவா?