Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பறிவாளன் 2 ஷூட்டிங் எப்போது? முடிவு செய்த விஷால்!

துப்பறிவாளன் 2 ஷூட்டிங் எப்போது? முடிவு செய்த விஷால்!

vinoth

, புதன், 7 பிப்ரவரி 2024 (07:17 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. பின்னர் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை.

இப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை தொடங்க உள்ளாராம். இதற்காக லொக்கேஷன்கள் பார்க்க லண்டனுக்கு சென்ற அவர் இப்போது சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி ஒரே கட்டமாக நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் அரசியலுக்கு வர ஜோதிடம்தான் காரணமா?