Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரிசு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்குதலா? கிளம்பிய சர்ச்சை!

வாரிசு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்குதலா? கிளம்பிய சர்ச்சை!
, புதன், 23 நவம்பர் 2022 (10:12 IST)
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடந்து வருகிறது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்து ஐதராபாத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த வாரிசு படப்பிடிப்புக்கு சென்ற செய்தியாளர்கள் அனுமதி இன்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஊழியர்கள் செய்தியாளர், மற்றும் கேமராமேனைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 ஆண்டுகளில் இப்போதுதான் அது நடந்துள்ளது… துணிவு நடிகர் மகிழ்ச்சி!