Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரி செல்வராஜின் புத்தகத்தை வெளியிட்ட வைகைப்புயல் வடிவேலு!

மாரி செல்வராஜின் புத்தகத்தை வெளியிட்ட வைகைப்புயல் வடிவேலு!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:21 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கவிதைத் தொகுப்பான உச்சியினியென்பது நூலை வடிவேலு வெளியிட்டுள்ளார்.

பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது”என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு திராவிடன்; கர்வ தமிழன்! – இன்ஸ்டாவில் பதிவிட்ட யுவன் சங்கர் ராஜா!