Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமி ஸ்கொயர்: த்ரிஷாவின் முடிவுதான் என்ன?

சாமி ஸ்கொயர்: த்ரிஷாவின் முடிவுதான் என்ன?
, சனி, 17 பிப்ரவரி 2018 (20:29 IST)
‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாகக் கூறியுள்ளாராம் த்ரிஷா.

 
விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சாமி’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. ஹீரோவாக விக்ரம் நடிக்க, ஹீரோயின்களாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது.
 
இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட த்ரிஷா, பிறகு என்ன காரணத்தினாலோ படத்தில் இருந்து விலகிவிட்டார். அவரை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம் என்ற நினைப்பில், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்டக் காட்சிகளை முதலில் எடுத்துவிட்டார் ஹரி.
 
ஆனால், எவ்வளவு சமாதானம் பேசியும் த்ரிஷா மசியவே இல்லை என்கிறார்கள். எனவே, த்ரிஷா இறந்துவிடுவதாகக் காட்டி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது படக்குழு. ஆனால், அதற்கும் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் த்ரிஷா. தன்னுடைய புகைப்படத்தைக் கூட படத்தில் பயன்படுத்தக் கூடாது என சொல்லிவிட்டாராம்.
‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாகக் கூறியுள்ளாராம் த்ரிஷா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீவா படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்