Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுசீந்திரன் படத்தின் கதை இதுதான்...

சுசீந்திரன் படத்தின் கதை இதுதான்...
, புதன், 17 ஜனவரி 2018 (17:35 IST)
தன்னுடைய அடுத்த படத்தின் கதை இதுதான் என வெளிப்படையாக அறிவித்துள்ளார் சுசீந்திரன்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிவரும் படம் ‘ஏஞ்சலினா’. புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து மறுபடியும் புதுமுகங்கள் நடிப்பில் இன்னொரு படத்தை இயக்க இருக்கிறார்.
 
“இன்றைய தலைமுறைக்கு கல்வி என்ற பெயரில் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோம். அதனால், அவர்கள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அவர்களின் உளவியல் மாற்றம் என்ன, வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறேன்.  இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யு சான்றிதழ் பெற்று ரிலீஸ் தேதி உறுதியான டிக் டிக் டிக்