Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னொரு பாலிவுட் பிரபலம் மீது தனுஸ்ரீதத்தா பகீர் புகார்

இன்னொரு பாலிவுட் பிரபலம் மீது தனுஸ்ரீதத்தா பகீர் புகார்
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (13:11 IST)
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீதத்தா. இவர் அண்மையில் காலா படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார் பரபரப்பை ஏற்படுத்தினார்.
‘2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள்" என்றார்.
 
தன்னைப்போலவே பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
 
இதனை ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார். அவருக்கு பதில் அளித்து தனுஸ்ரீதத்தா கூறும்போது, ‘கணேஷ் ஆச்சாரியா பொய் பேசக்கூடியவர். அவருக்கு இரண்டு முகம் இருக்கிறது. பத்து வருடத்துக்கு முன்பு எனக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவத்தில் நானா படேகருக்கு உடந்தையாக இருந்தார்’ என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமர்சித்தவர்களுக்கு சமந்தா கொடுத்த பதிலடி