Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா படத்திற்கு வந்த தடை; நீதிமன்றம் தீர்ப்பு

சூர்யா படத்திற்கு வந்த தடை; நீதிமன்றம் தீர்ப்பு
, சனி, 13 ஜனவரி 2018 (13:13 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ரிலீஸாக நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக  நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கேங் என தெலுங்கிலும்  வெளியாகிறது.
இப்படத்திற்கு உரிமை கோரி நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி தியாகராஜன் உரிமையாளராக உள்ள ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இதை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட தடையில்லை என கூறியதை தொடர்ந்து  தமிழில் படம் வெளியானது.
 
இந்நிலையில் சாந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதில் தெலுங்கில் படத்தை வெளியிட தடைவிதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதிகள் தெலுங்கிலும் படத்தை வெளியிட தடையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பிறந்ததில் இருந்தே டான்ஸ் ஆடுவேன்” - பிரபுதேவா