Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யை அடுத்து சூர்யா கொடுத்த 'கோல்ட் காயின்'

விஜய்யை அடுத்து சூர்யா கொடுத்த 'கோல்ட் காயின்'
, ஞாயிறு, 13 ஜனவரி 2019 (20:17 IST)
தளபதி விஜய் சமீபத்தில் ஒருசில குறிப்பிட்ட ஊடகவியலார்களுக்கு கோல்ட் காயின் கொடுத்தார் என்பது தெரிந்ததே. விஜய் கொடுத்த கோல்ட் காயின் ஒருசில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது

இந்த நிலையில் விஜய்யை அடுத்து சூர்யாவும் நேற்று 120 பேர்களுக்கு கோல்ட் காயின் கொடுத்துள்ளார். ஆனால் சூர்யா கொடுத்தது 'என்.ஜி.கே' படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

'என்.ஜி.கே' படத்தில் பணிபுரிந்த பெரிய டெக்னீஷியன்கள் முதல் டிரைவர், கிளாப் அடிப்பவர் வரை அனைவருக்கும் ஒரு நபருக்கு கூட விட்டுப்போகாத வகையில் கோல்ட் காயின் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யாவின் இந்த தாராள தங்க மனதை படக்குழுவினர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

webdunia
இந்த நிலையில் பொங்கல் முடிந்தவுடன் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவிருப்பதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 63 படத்தில் 'சர்கார்' பட காமெடி நடிகர்