Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடிடிக்காக புது வெப் சீரிஸை தொடங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.. ஹீரோவாக அசோக் செல்வன்!

ஓடிடிக்காக புது வெப் சீரிஸை தொடங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.. ஹீரோவாக அசோக் செல்வன்!
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:25 IST)
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இதையடுத்து இப்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் சினிமாவில் கால்பதித்துள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடிக்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றுக்கு ஷோ ரன்னராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த சீரிஸில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்க, நோ ஆப்ரஹாம் என்பவர் இயக்குகிறார். இந்த தொடரின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தை உங்களோடு பார்க்கணும் சார்… ஷாருக் கானுக்கு கோரிக்கை வைத்த லோகேஷ்!