Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினேகன் தொடங்கும் ‘மக்கள் நூலகம்’

சினேகன் தொடங்கும் ‘மக்கள் நூலகம்’
, வெள்ளி, 24 நவம்பர் 2017 (17:04 IST)
கவிஞர் மற்றும் பாடலாசிரியரான சினேகன், ‘மக்கள் நூலகத்தை’த் தொடங்க இருக்கிறார்.


 
‘பிக்பாஸ்’ புகழ் கவிஞர் சினேகன், மக்களுக்கான பெரிய நூலகம் திறக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என தெரிவித்திருந்தார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால், பரிசுத்தொகையான 50 லட்சத்தைக் கொண்டு அந்த நூலகத்தை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
ஆனால், அவர் அதில் ஜெயிக்கவில்லை. இருந்தாலும், அவருடைய கனவான மக்கள் நூலகத்தை அவர் அமைக்க இருக்கிறார். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து நிதியுதவி வருவதாகவும் சினேகன் தெரிவித்துள்ளார்.
 
சினேகனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்கரியாப்பட்டி என்ற இடத்தில் இந்த நூலகம் அமைய இருக்கிறது. இதில், எல்லாவிதமான அரிய நூல்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என சினேகன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவின்பாலி இளம்வயது மோகன்லால் - நடிகை துளசி