Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊ சொல்றியா மாமா பாடலில் ஆடும் போது பயமாக இருந்தது… சமந்தா பகிர்ந்த தகவல்!

ஊ சொல்றியா மாமா பாடலில் ஆடும் போது பயமாக இருந்தது… சமந்தா பகிர்ந்த தகவல்!

vinoth

, திங்கள், 18 மார்ச் 2024 (13:57 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் சமந்தா நடனத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. ஐந்து மொழிகளிலும் அந்த பாடல் வெவ்வேறு பாடகிகளால் பாடப்பட்ட நிலையில் தமிழில் ஆண்ட்ரியா அந்த பாடலைப் பாடினார். படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் மிகப்பெரிய காரணியாக அமைந்தது.

இந்த பாடல் மூலம் முதல் முதலில் ஒரு ஐய்ட்டம் நம்பர் பாடலில் சமந்தா பாடினார். அது பற்றி இப்போது பகிர்ந்துள்ள சமந்தா “அந்த பாடலில் ஆடும் போது நான் பயந்தேன். ஏனென்றால் அதற்கு முன்னர் அப்படி ஒரு பாடலில் நடனமாடியதில்லை. அதனால் அந்த அனுபவத்தைப் பெறுவதற்காக அந்த பாடலில் ஆட சம்மதித்தேன்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூதுகவ்வும் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ள படக்குழு!