Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் ஆகிறாரா நடிகை சாய்பல்லவி?

இயக்குனர் ஆகிறாரா நடிகை சாய்பல்லவி?
, சனி, 23 மார்ச் 2024 (07:23 IST)
நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டாராம்.

இப்போது யாஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சாய்பல்லவி, விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதையை சாய் பல்லவி எழுதி வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவை ஒருநாள் கடனாக தருவீர்களா… ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் பதில்!