Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜப்பான் பட தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த படத்துக்கு தயாரான ராஜு முருகன் – கதாநாயகனாக எஸ் ஜே சூர்யா!

ஜப்பான் பட தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த படத்துக்கு தயாரான ராஜு முருகன் – கதாநாயகனாக எஸ் ஜே சூர்யா!

vinoth

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:27 IST)
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் கழுவி ஊற்றினர்.

இந்நிலையில் இப்போது ஜப்பான் தோல்வியில் இருந்து மீண்டுள்ள ராஜு முருகன் அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். அவரின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுப்பேட்டை 2 திரைப்படத்தை தயாரிக்கப் போகும் பிரபல தயாரிப்பாளர்!