Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்த ‘பாகுபலி’ இயக்குநர்

ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்த ‘பாகுபலி’ இயக்குநர்
, திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:51 IST)
‘பாகுபலி’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, நேற்று நடந்த ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்துள்ளார்.


 
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது ‘பாகுபலி’. இந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்கிறார்கள். அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

webdunia

 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் நேற்று போட்டி நடந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை, நேரில் வந்து ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடியபோதெல்லாம் எழுந்துநின்று கைதட்டி ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கப்பதக்க நாயகனை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்