Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முக்கியக் காட்சிகளை படமாக்க ஜப்பான் செல்லும் புஷ்பா 2 படக்குழு!

முக்கியக் காட்சிகளை படமாக்க ஜப்பான் செல்லும் புஷ்பா 2 படக்குழு!

vinoth

, புதன், 7 பிப்ரவரி 2024 (13:47 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்க ஜப்பானுக்கு சென்றுள்ளது புஷ்பா 2 படக்குழு. முதல் பாகத்தில் இந்தியாவுக்குள் செம்மரக் கடத்தல் காரனாக வரும் அல்லு அர்ஜுன்,  இரண்டாம் பாகத்தில் சர்வதேச அளவில் நடக்கும் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவது போல உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ராஸ் காரன் திரைப்படத்தில் நடிகையாக களமிறங்கும் சிரஞ்சீவியின் தம்பி மகள்!