Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யானையை விட்டு சிங்கத்தைப் பிடித்துக் கொண்ட பிரபு சாலமன்.. பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!

யானையை விட்டு சிங்கத்தைப் பிடித்துக் கொண்ட பிரபு சாலமன்..  பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!

vinoth

, சனி, 4 மே 2024 (17:00 IST)
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அவரின் மகன் சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த படத்துக்காக மொரிஷியஸ் தீவுகளில் லொக்கேஷன் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஒரு சிங்கம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராயன் படத்தின் பின்னணி இசையை இன்னும் ரஹ்மான் தொடங்கவேயில்லையா? காரணம் என்ன?