Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இணையும் அசோக் செல்வன் –விக்னேஷ் ராஜா… போர்த்தொழில் இரண்டாம் பாகமா?

மீண்டும் இணையும் அசோக் செல்வன் –விக்னேஷ் ராஜா… போர்த்தொழில் இரண்டாம் பாகமா?

vinoth

, வெள்ளி, 8 மார்ச் 2024 (06:51 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. போர் தொழில் திரைப்படம் ஓடிடியிலும் ரிலீஸாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் மீண்டும் இணைகின்றனர். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இந்த படம் அவர்களின் முதல் படமான போர்த்தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆண்டு கால்ஷீட்- சூப்பர் ஸ்டாருக்கு கண்டிசன் போட்ட ராஜமெளலி!