Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பேட்ட" பொங்கலுக்கு பராக் - ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு!

, வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் பேட்ட. இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது என தெரிவித்த படக்குழு தற்போது கைவிரித்து விட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். 
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
 
சமீபத்தில் வெளியான பேட்ட படத்தின் 3 -வது லுக் போஸ்டரில் பொங்கலுக்கு பராக் என்று என்றெல்லாம் வெளியிட்டனர். இதனால் 24 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஒன்று பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருந்தனர்.
 
மேலும் இந்த பொங்கல் தலைவர் பொங்கல், பேட்ட பொங்கல் என்று கொண்டாடிய ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி தற்போது படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளளது.
 
அதாவது, ரஜினி நடித்துள்ள 2.0 படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் சுமார் 44 நாட்களுக்கு அவரின் அடுத்த படம் வெளியாவது அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் ரஜினிகாந்த் தரப்பில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் இளம் நடிகர்கள் அஜித் சிம்பு அகியோர்களுடன் போட்டிபோட்டு தன படத்தை ரிலீஸ் செய்வதில் ரஜினிக்கு துளியும் விருப்பமில்லையாம் அதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் வருவதை பெரும்பாலான விநியோகிஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கூட சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளாராம்.
 
அதனால் பேட்ட படத்தை பொங்கலுக்கு தள்ளிப்போட்டு வரும் குடியரசு தினத்தன்று வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா - வின் என்ஜிகே படக்குழுவின் புதிய அப்டேட்